Thursday, July 16, 2020

துளிகள்


கிழக்கும் அல்ல மேற்கும் அல்ல
நிஜமுமல்ல பொய்யுமல்ல
சொல்வதற்கொன்றுள்ளது
சொல்லில்லை எனச் சொல்வது
நிழலின் இருப்பை யார் மறுக்கக்கூடும்?
நிழலினைக் கொன்று யார் வெல்லக்கூடும்?
ஒளி தன் நிழலை எவ்வாறு காணும்?
முற்றும் இருள் எதைத்தன் நிழல் எனக் கொள்ளும்?

சாளரத்தின் வெளியே பச்சை மரங்கள்
காய்ந்து தொங்கும் தென்னைமட்டை

கலைந்த கருமுகில் பொழிந்து சென்ற துளிகள்

No comments:

Post a Comment